tamilnadu

img

இணையப் பாதுகாப்புக் கொள்கை 2.0 வெளியீடு

சென்னை, செப்.8-
டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இணையப் பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த கொள்கையானது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, நெட்வொர்க் அல்லது டிஜிட்டல் தரவு களை பயன்படுத்தும் அனைத்து மாநில அரசு துறைகள், மாநில பொதுத்துறை பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பிற பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும்.

இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு, மென் பொருள், குடிமக்கள் சேவைகள் ஆகிய தகவல்கள் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விரிவான பாதுகாப்பு இடர்பாடுகளை குறைப்பதற்கான உத்தியை உருவாக்குதல், பாது காப்பு திறன்கள் மற்றும் உள்கட்ட மைப்பு நிறுவுதல், பணி-முக்கியத்து வம் அமைப்புகள் மற்றும் தரவுகளின் பாதுகாப்பிற்காகவும், சைபர் தாக்கு தல்களை கண்டறிதல், தடுப்பது மற்றும் தணித்தல் ஆகியவற்றுக்கு உத வும் பயனுள்ள இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் அமையும். அரசாங்க இணையதளங்கள், பயன் பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிகழும் இணையப் பாதுகாப்பு சம்ப வங்கள் தொடர்பான தகவல்களைத் தொகுக்க, சைபர் பாதுகாப்பு சம்பவ மறுமொழி குழுவுடன் ஒருங்கி ணைக்க அனைத்து மாநில அரசுத் துறைகளும் அதிகாரிகளை பரிந்து ரைக்க வேண்டும். அனைத்துத்துறை களில் இருந்தும் பரிந்துரைக்கப்பட்ட அலுவலர்களும் ஆண்டுதோறும் ஓரிரு நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.