மாற்றுத்திறனாளிகளை வீட்டு காவலில் வைத்த கடலூர் காவல்துறையினர்
கடலூர், ஏப். 22- கடலூர், பண்ருட்டியில் மாற்று திறனாளி கள் சங்க தலைவர்களை காவல்துறையினர் இரவு முழுவதும் வீட்டுக்கு காவலில் வைத்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செவ்வா யன்று சென்னை கோட்டை முன்பு தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சென்னையை நோக்கி புறப்பட்டனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தி னரை போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாதபடி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ஆளவந்தாரை சான்றோர் பாளையத்தில் உள்ள அவ ருடைய வீட்டில் திங்களன்று இரவு 10க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வர விடாமலும் அவ ருடைய கைபேசியை பறித்துக் கொண்டும் வீட்டுக்காவலில் வைத்தனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத ஆளவந்தார், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரை பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னைக்கு தன்னுடைய மனைவியின் கைபேசி வாயிலாக தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தார். இதேபோல் பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இரண்டு கைகள் இல்லாத மாற்றுத் திறனாளி பெண் ஜீவா என்பவரை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுத்து இரவு முதல் போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகளை வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி போலீஸ்சார் வீட்டுக்கு காவலில் வைத்தது குறிப்பிடத்தக்கது.