tamilnadu

கடலூர் முக்கிய செய்திகள்

கடலூரில் சிறைக்கைதிகள் 2 பேருக்கு கொரோனா

கடலூர், மே 27- கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 700 தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுள் தண்டனை பெற்று நன்ன டத்தையில் உள்ள 5 பேர் சென்னை புழல்  சிறையில் சட்ட விழிப்புணர்வு மையம் சார்பில்  நடைபெற்ற தன்னார்வலர் பயிற்சிக்கு மார்ச் மாதம் சென்றிருந்தனர். பயிற்சி துவங்கிய நிலையில் கொரோனா பரவலைத் தொடர்ந்து  பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மே  22ஆம் தேதி கடலூர் சிறைக்கு அனுப்பி வைக்  கப்பட்டனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் 2  பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்ப டுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன் கூறுகையில், சென்  னைக்குச் சென்று வந்த 2 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில்  இருந்த சக கைதிகள், சிறை அலுவலர்கள் 10 பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். சென்னையிலிருந்து கடலூர் திரும்பிய உடனேயே அவர்களை தனிமைப்படுத்தி விட்டோம். எனவே மற்ற கைதிகளுக்கு பரி சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசி யம் ஏற்படாது என்றார்.

டெல்டா பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி

கடலூர், மே 27- கடலூர் மாவட்டம் டெல்டா பகு திக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்த  தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு அரசு  காவிரி டெல்டா  மாவட்டங்களுக்கு சிறப்பு குடிம ராமத்து நிதி ஒதுக்கீடு  செய்தது.  கடலூர் மாவட்டம் காவிரி டெல்டா  பகுதியின் கடைக்கோடி பகுதி யாகும். இந்த மாவட்டத்திற்கு சிறப்பு  நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட வில்லை.    கடலூர் மாவட்டத்தில் உள்ள  டெல்டா பகுதியையும் சேர்த்து சிறப்பு  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என  விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி  சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், புவனகிரி  வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தமிழக அரசு கடலூர் மாவட்ட டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், இதுகுறித்து தொழில்துறை அமைச்சருக்கும், வேளாண் துறைச் செயலாளர்  ககன்சிங் பேடிக்கும், தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பி  கடலூர் மாவட்ட விவசாயி களுக்காக குரல் கொடுத்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனுக்கும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் மே 29ஆம் தேதி நடை பெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.