tamilnadu

img

பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்”- பாக்யராஜ் சர்ச்சை பேச்சு

பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் பாக்யராஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்-புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாஜக தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.

புத்தகத்தை பெற்றுக்கொண்ட பின்னர்  நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், பிரதமர் மோடி நிறைய வெளிநாடுகள் சென்றதை விமர்சிப்பார்கள். அவர் பயணிப்பதற்கான உடல் தகுதி இருப்பதால் தான் அவர் வெளிநாடு போகிறார் என பேசினார்.

மேலும், பேசிய அவர் இக்கட்டான சூழல் வரும்போது அதை சமாளிப்பது ரொம்ப கஷ்டம். எப்படி செயல்பட்டாலும் அவர் மீது விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள பிரதமருக்கு நான் சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறைபிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகிட சொல்லுங்க என பேசினார்.

இயக்குநர் பாக்யராஜ் இவ்வாறு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் எல்லா நிலையிலும் வளர்ச்சி குறைந்தவர்களை.. உடல் நலம் குன்றியவர்களை.. மன நலம் குன்றியவர்களை.. கேலி பேசும் பேச்சு இது.

பாக்யராஜ் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். குழந்தைகள் நல வாரியம் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.