tamilnadu

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ. 1000 கோடி நிவாரண உதவி

சென்னை.டிச.31-  கனமழை-வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 1000 கோடி நிவாரண உதவி ஒதுக்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: வரலாறு காணாத மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென் காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார் பில் ஏற்கனவே பல்வேறு நிவாரண உத விகள் அறிவிக்கப்பட்டு வழங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள்  வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதலமைச்சரின் இந்த அறி விப்பு பாராட்டுக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லச் செயற்குழு இதனைவரவேற்கிறது. மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகின.

அனைத்தையும் இழந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்ட னர். தமிழக அரசின் சார்பில் மேற்கொ ள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பேரு தவியாக அமைந்தன. ஒன்றிய அரசு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் நிவா ரண உதவிகளை, உதவித் தொகை களை மேலும் அதிகரித்திட வாய்ப்பு கள் ஏற்படும்.

ஒரு ரூபாய் கூட ஒதுக்காத மோடி அரசு 
தமிழக முதலமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து வெள்ளப்பாதிப்பு களுக்கு நிவாரணம் மற்றும் மறு கட்ட மைப்பு பணிகளை சீர் செய்திட ரூ. 21 ஆயிரம் கோடி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கிட வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், இதுகாறும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், கடுமை யான பாதிப்புகளை கணக்கில் கொண்டு தற்போது வீடுகளை இழந்த  மக்களுக்கு புதிய வீடு கட்டவும் - புனர மைக்கவும், பயிர் சேதங்களுக்கும், கால்நடை உயிரிழப்புகளுக்கும், சிறு  வணிகர்கள், சாலையோர வியாபாரி கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் - முனைவோர்கள், சுய  உதவிக்குழுக்கள், மீனவர்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், உப்பளங்கள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளும், குறைந்த வட்டி யில் கடன் வழங்குவதற்கும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அரசே மேம்படுத்தி தருவதற்கும் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்க ளுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உரிய நிதியை  ஒன்றிய அரசு ஒதுக்கிடுக!
ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் மீது கொண்டுள்ள வஞ்சகப் போக்கை  கைவிட்டு, வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ. 21 ஆயி ரம் கோடி நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லச் செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த  கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 3 அன்று சென்னை யில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெறும் முற்றுகைப்  போராட்டத்திற்கு அனை த்துத் தரப்பு மக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள் விடுக்கிறது.