tamilnadu

சிபிஎம் துறையூர் தெருமுனைப் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.4-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்துறையூர் ஒன்றிய செயலாளர் எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழநிசாமி பேசுகையில், பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிக்த்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் ஏப்ரல் 5-ம் தேதி எரகுடியிலும், 7-ம் தேதிகண்ணனூர், 9-ம் தேதி வைரிச்செட்டிபாளையம், 10-ம் தேதிதுறையூர் நகரிலும் தெருமுனைப் பிரச்சாரம் செய்வது எனதீர்மானிக்கப்பட்டது. 11-ம் தேதி தொகுதி முழுவதும் வெண்மணி கலைக்குழு மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது.5-ந் தேதியிலிருந்து தினசரி வீடு வீடாக வாக்குகள் கேட்டுபிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உப்பிலியாபுரம் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றியக் குழுஉறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், முத்துக்குமார், அன்பழகன், முத்துக்குமார், துறையூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாக்யராஜ், ரவி, முனுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

;