குடியிருப்பு கட்ட வலியுறுத்தி திமுக எம்எல்ஏவுக்கு சிபிஎம் நன்றி
திடீர் நகரில் நிரந்தர அடுக்குமாடி
எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திடீர் நகர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியதற்கு சிபிஎம் நன்றி தெரி வித்துள்ளது. சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, 99வது வட்டம், திடீர் நகர் பகுதி மக்களின் வாழ்விட உரிமைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏராளமான இயக்கங்களை முன்னெடுத்து வருகிறது. அப்பகுதியிலேயே அடுக்குமாடி குடி யிருப்பு கட்டி தர வலியுறுத்தி மாநகர மேயர், ஆணையர், சட்டமன்ற உறுப்பினர், மாநகர மன்ற உறுப்பினர், முதலமைச்சர் அலுவலகம், மாநகராட்சி அதிகாரிகள், நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரை நேரடியாக சந்தித்து ஏராளமான மனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இக்கோரிக்கை வலியுறுத்தி தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை சிபிஎம் நடத்தி வரும் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவை யில், மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன்,”சென்னை மாநகராட்சி மண்டலம் 8, வாதியன் 99 புரசைவாக்கத்தில் உள்ள பிரிக்லின் சாலையில் திடீர் நகர் என்ற ஒரு பகுதி உள்ளது. அங்கு சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த இடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும் மாநகராட்சிக்கும் சொந்த மானதாக இருக்கிறது. ஆகவே, அந்த மக்களுக்கு நிரந்தரமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், புரசை வாக்கம் பிரிக்லின் சாலையில் ஓட்டேரி சுடுகாடு அமைந்திருக்கிறது. அங்குதான் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் கல்லறை இருக்கிறது. எனவே, அந்த பிரிக்லின் சாலைக்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பெயரை சூட்ட அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். திடீர் நகர் பகுதி மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்றும் பிரிக்லின் சாலைக்கு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பெயர் வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனுக்கு சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரண்டு கோரிக்கை களையும் தமிழக அரசு உடன் நிறைவேற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.