அயப்பாக்கம் ஊராட்சி 3வது வார்டில் தெருக்கள், சாலைகளை செப்பனிடக் கோரி சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊராட்சி அலுவலத்தில் பகுதிக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் மனு அளித்தனர். சாலை, தெருக்களில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்வதாகவும், மழைக்காலம் முடிந்த பிறகு கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என்று உள்ளாட்சி அலுவலர் உறுதியளித்தனர்.