tamilnadu

img

‘மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி; உள்ளாட்சியில் தன்னாட்சி! ’

சென்னை, செப். 24 - உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதி காரம், அதிக நிதி கேட்டு செவ்வாயன்று (செப்.24) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாநகராட்சி துணைமேயர் தி. நாக ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஐ. முகமது உதுமான், திருக்கண்டலம் ஒன்றியக் கவுன்சிலர் பி. இரவி, பழநி நகராட்சி துணைத்தலைவர் கே. கந்தசாமி, சிதம்பரம் நகராட்சி துணைத்தலை வர் எம். முத்துக்குமரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்  ஆர். ஜெயராமன், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. காங்கிரஸ் கட்சியின் அமைப்புச் செயலாளர் ராம்மோகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் துணைத்தலைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் எல். சுந்தர்ராஜன் (வட சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை), ஆர். வேல்முருகன் (தென்சென்னை) உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.