உலக கேரம் போட்டியில் 3 தங்கம் வென்ற வடசென்னையைச் சேர்ந்த எம்.காசிமாவையும், பயிற்சியாளரும் அவரது தந்தையுமான மேகபூப்பாட்ஷாவையும் தோழர் சந்திரன் இலவச கல்வி மையத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதில் சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், எம்.வி.கிருஷ்ணன் (வியாபாரிகள் சங்கம்), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், அ.விஜயகுமார், ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.