புதுதில்லி, ஜன. 19 - ஜனவரி 22 அன்று மதியம் வரை அனைத்து அரசு அலுவலகங்களும், ஒன்றிய அரசின் கீழ் உள்ள நிறுவனங் களும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கம் “அதிகாரப்பூர்வ குறிப்பாணை” (“Office Memoran dum”) வெளியிட்டுள்ளது.
இதனை அதிகார துஷ்பிரயோகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான சமயச் சடங்குகளில் பங்கேற்பதற்கு ஊழியர்களுக்கு வசதி செய்துதரும் விதத்தில் ஜனவரி 22 அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து அரசு அலுவலகங்கள், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறு வனங்கள் மற்றும் தொழில் நிறு வனங்கள் அனைத்தும் மூடப்பட்டி ருக்கும் என்று ஒன்றிய அரசாங்கம் “அதிகாரப்பூர்வ குறிப்பாணை” (“Official memorandum”) வெளியிட்டிருக்கிறது. இதேபோன்றே பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களும் செய்திருப்ப தாக செய்திகள் வெளியாகி இருக் கின்றன.
இது, முற்றிலும் மதஞ்சார்ந்த விழாவில் கலந்துகொள்ள அரசை யும், அரசாங்கத்தையும் நேரடியாக சம்பந்தப்படுத்திடும் மற்றுமொரு நடவடிக்கையாகும். ஊழியர்கள் தங்கள் மத நம்பிக்கை மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக தாங்கள் சொந்தமாக தெரிவு செய்து கொள்வதற் கான உரிமையைப் பெற்றிருக்கிறா ர்கள்.
ஆனால் அரசாங்கம் இவ்வாறு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதன் மூலம் தன் அதிகாரத்தை முற்றிலு மாகத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயல்கள், அரசு என்பது எவ்விதமான மதச்சாயமுமின்றி இருந்திட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் வழி காட்டும் நெறிமுறைகளுக்கும், அர சமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது. (ந.நி.)