tamilnadu

img

பழையபேட்டை கிராம சுடுகாட்டுக்கு இடம் வழங்க வேண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

பழையபேட்டை கிராம சுடுகாட்டுக்கு இடம் வழங்க வேண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் மனு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், பச்சூர் அடுத்த பழையபேட்டை கிராமத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கடந்த 3 தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.  சர்வே எண் 378 அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் சுடுகாடு என பதிவேற்றம் செய்துள்ளனர்.  அதிகாரிகள் உத்தரவின் பேரில் 56.81 சென்ட் நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த இடத்தை சுடுகாட்டுக்கு பயன்படுத்த அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் திடீரென்று விளம்பர பலகை வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் நாட்றம்பள்ளி வட்டாட்சியரிடம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தனர். ஒரு மாதங்களாகியும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து,  சிபிஎம் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டச் செய லாளர் எஸ்.டி.சங்கரி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசெளந்தரவள்ளியிடம் (மார்ச் 4 ) மனு அளித்தனர்.  அந்த மனுவில், பழையபேட்டை கிராமத்தில் ஏற்கெனவே சுடுகாடு பயன்பாட்டுக்கு இருந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்.  அரசு பதிவேட்டில் உள்ள 56.81 சென்ட் இடத்தை அளவீடு செய்து மீண்டும் சுடுகாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த இடத்தில் எரிமேடை, காரிய மேடை, சுற்றுச்சுவர், மின்விளக்கு, தண்ணீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதி களை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர். திருப்பத்தூர் வட்டம், புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசாமி ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்துள்ளார்.  எனவே, அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிர மித்த புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர் மக்கள் சென்று வந்த போது சாலையை மீட்டு, போலி பத்திரம் பதிவு செய்ததை ரத்து செய்து, அம்மக்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், குருமன்ஸ் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சாதி சான்று உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகள் குறித்தும் பழங்குடி மக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஜோதி, தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் , வி.சிங்காரம், கே.வெங்கடேசன், ஆர்.ஆனந்தன், ஏ.முருகன், பி.வீரபத்திரன் மற்றும் தோழர்கள் செல்வம், முத்துகிருஷ்ணன்  ஆகியோர் உடனிருந்தனர்.