சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்திற்கு நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சிக்னல் விளக்கு அமைக்கக் கோரி போக்குவரத்து காவல் துறையினரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் சிக்னல் விளக்கு அமைப்பதற்கான ரூ. 10 லட்சம் நிதையையும் கட்சிக் கிளை வசூல் செய்து கொடுத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டது. இதை போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் ஜெயகரன் திறந்து வைத்தார். இதில் அம்பத்தூர் ஆய்வாளர் சி.பாபு, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் வீரன், மூர்த்தி, பகத்சிங், பாலு, சுதர்சனம், சீனு (விசிக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.