tamilnadu

img

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் மரணம் - சிபிஎம் இரங்கல்

முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் தாயார் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புத் தாயாரை இழந்து வாடும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.