மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் ரூபாய் ஒரு லட்சம் கட்சி நிதி வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், கட்சியின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினரும், சிஐடியு கரூர் மாவட்ட துணைத் தலைவருமான எம்.சுப்பிரமணியன், கரூருக்கு வருகை தந்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்தார். அப்போது, ரூபாய் ஒரு லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி நிதியாக வழங்கினார். நிதியை பெற்றுக் கொண்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலக் குழு சார்பில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி குஞ்சிதம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். இதில் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.