tamilnadu

img

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

சென்னை:
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி கேட்டு  மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள் கிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.