tamilnadu

img

புதுச்சேரி பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைளுக்கு எதிர்ப்பு பாகூர் முழுவதும் சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி பாஜக கூட்டணி அரசின்  மக்கள் விரோத கொள்கைளுக்கு எதிர்ப்பு  பாகூர் முழுவதும் சிபிஎம்  பிரச்சாரம்

புதுச்சேரி, ஜூன் 21 - ஒன்றிய, மாநில என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பாகூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி யில் மாநில வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தில், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் நன்மை என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவோ, மாநில அரசின் கடனை ரத்து செய்யவோ முன்வரவில்லை. சட்ட ஒழுங்கு சீர்கேடு, வேலையின்மை, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் முடக்கம், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதை மக்களிடம் விளக்கிச் இப்பிரச்சாரம் நடத்தப்பட்டது. பாகூர் மேற்கு வீதியில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.  பாகூரில் துவங்கிய பிரச்சாரம்  கன்னியகோவில், சுள்ளியங்குப்பம், மணப்பட்டு, மூர்த்தி குப்பம், கிருமாம் பாக்கம், பிள்ளையார்குப்பம், பாதிக்கப்  பட்டு அரங்கனூர், செலியாமெடு, ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்  செல்வன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நடைபெற்ற நிறைவு பிரச்சாரத்தில் மாநில செயற்குழு உறுப்பி னர் பெருமாள் முதல் நாள் பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி, பாகூர் கமிட்டி உறுப்பினர்கள் ஹரிதாஸ், சேகர், வடிவேலு, பக்தவச்சலம், கிளை செயலாளர்கள் முருகையன், ஆனந்த ராமன், சதாசிவம், வெங்கடாசலம் உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.