tamilnadu

img

முதல்வருடன் சிபிஐ தலைவர்கள் சந்திப்பு...

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை செவ்வாய்க்கிழமை டிசம்பர் 1 அன்று மாலை அவரது இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்பி, செயற் குழு உறுப்பினர்கள் நா.பெரியசாமி, எம். ஆறுமுகம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பி.எல்.சுந்தரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்தனர்.அப்போது, தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்க ளுக்கு கடந்த மார்ச் 16 ஆம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தபடி மாதாந்திர ஊதியத்தை ரூ.3600 ஆக உயர்த்தவும், குடிநீர் விநியோகப் பணியாளர் களுக்கு ரூ. 4000 ஆம் ஆகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட வேண்டும். இப்பணியாளர் களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அரசு ஆரம்பப் பள்ளிகளில் பயின்று வரும் அறிவுக் கூர்மையுள்ள மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், அதற்கான கட்டணங்களை கட்டுமானத் தொழிலாளர் வாரியம் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப்பள்ளியின் முக்கியத்துவத்தை குறைத்து விடும் என்பதால் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் மதுபான சில்லறை விற்பனைப் பிரிவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட அதிக பட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) மதுபானங்கள் விற்பனை செய்ய, கேரள மாநிலத்தில் உள்ளது போல் மதுபான விற்பனைக் கடைகளையும், பணியாளர் பணிநிலைகள், ஊதியம் போன்றவைகள் திருத்தியமைக்க வேண்டும்.டாஸ்மாக் பணியாளார்களுக்கு ஓய்வூதியம் வழங் கவும். அவர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கவும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.தாய்- சேய் நலன் காக்கும் திட்டத்தின் உயிர்நாடியாக செயல்படும் ஆஷா பணியாளர்களுக்கு வழங் கப்படும் ஊக்கத்தொகை பல மாதங்கள் வழங்கப் படவில்லை. இவர்களது பணியை நிரந்தரமாக்கவும், காலமுறை ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.ஏரி, குளங்கள் பராமரிப்பு, சாலைகள் மேம்பாடு திட்டங்கள் செயலாக்கம் குறித்தும் கோரிக்கை விடப்பட்டது.

;