பாஜகவின் இழிவான அரசியலுக்கு எதிராகவும், மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் ஜார்க்கண்ட் மாநிலம் புந்து நகருக்கு அருகே உல்குலானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மாநிலச் செயலாளர் பிரகாஷ் விப்லவ் உள்ளிட்டோர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.