சென்னை,டிச.25- ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளு நரும், காமராஜர், கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றிய வரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலை மைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.
ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக மக்கள் பணியாற்றியவர், எம்.எம். ராஜேந்திரன் மறைவு பேரிழப் பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனை வருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.எம். ராஜேந்திரனின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி னர். அவரது சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.