tamilnadu

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ.14-

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21-ல்  விழுப்புரம் அமர்வு நீதிமன்றத் தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்பி ஒருவருக்கு, சட்டம்  ஒழுங்கு சிறப்பு டிஜிபி,பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவருக்கு உடந்தையாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி  கண்ணன் உடந்தையாக இருந்த தாகவும் புகார்கள் எழுந்தன. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பு டிஜிபி உள்ளிட்ட 2 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 

சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் 68 சாட்சிகளிடம் விசாரணை நடந்து  முடிந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்ற வாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றவாளி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு  முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. பாலியல் தொல்லை கொடுத்த தாக பெண் ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலை யில் சிறை தண்டனையை எதிர்த்து  ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் விசார ணைக்கு ஆஜராக உத்தரவிடப் பட்டது. 

மேல்முறையீடு செய்த ராஜேஷ் தாஸ் வாதத்தை தொடங் காமல் தொடர்ந்து வாய்தா கேட்டால் விசாரணையின்றி தீர்ப்பு  வழங்கப் போவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.