tamilnadu

img

ஜெ., சொத்துக்களை நீதிமன்றம் முடிவு செய்யும்: அமைச்சர்

சென்னை:
கோடநாடு எஸ்டேட் உள்பட ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நானே உரிமையாளர் என்று வருமான வரித்துறையிடம்  சசிகலா விளக்கம் அளித்துள்ளதாக  தகவல் வெளியானது.இந்நிலையில் இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  சென்னை காசிமேட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில்  இருப்பதால் நீதிமன்றம்தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவதே அதிமுகவின் நோக்கம். மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி பெறுவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது என்றார்.

;