tamilnadu

ஆவடியில் குடும்பத்தகராறு: தம்பதி தற்கொலை

அம்பத்தூர், ஜூன் 12- ஆவடியில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி புதனன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வர் பிரகாஷ் (42). இவர் ஆவடி காய்கறி அங்காடி யில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (36). தம்பதிக்கு தலா மகன், மகள் உள்ளனர். இதற்கிடையில் பிரகாஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தெரிந்த கொண்ட சத்யா, பிர காஷை கண்டித்து தக ராறு செய்துள்ளார். இதன் பிறகும் பிரகாஷ் அந்த பெண்ணுடன்  தொடர்பை துண்டிக்காமல் இருந்ததால், சத்யா மன முடைந்துள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை காலை பிர காஷ் அங்காடிக்கு வேலைக்கு சென்று விட்டு, மதியம் வீடு திரும்பி யுள்ளார் அப்போது சத்யா படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பிரகாஷ் முன்னறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது.

தகவல் அறிந்து ஆவடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து மகன், மகள் இரு வரும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி யது.