tamilnadu

சுட்டெரிக்கும் வெயில்: சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்

சென்னை, மே 6- தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறப் படும் அதிக உச்ச வெயில் சனிக்கிழமையன்று தொடங் கியது. பொதுவாக இந்த  காலக் கட்டத்தில் தான் வெப்பம் வாட்டி வதைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.

பகல் நேரங்களில் சாலை யில் நடமாட மக்கள் அச்சப் படும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் கேழ்வரகு கூழ், கம்மங் கூழ், மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்றவற்றை பருகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர், நீர்மோர் பந்தல்களில் மக்களின் தாகத்தை தணித்து வரு கின்றனர்.

சுட்டெரிக்கும் வெயி லால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெயில் அதிகமாக இருக் கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு பசுமை  பந்தல் அமைக்கும் பணியை பல்வேறு மாநகராட்சிகள் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் ஏற்படுத் தும் வகையில், சென்னை மாநகரச் சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்ட மாக அண்ணா நகர், அடை யாறு, வேப்பேரி, ராயப் பேட்டை உள்ளிட்ட 10 பகுதி களில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்க மாநக ராட்சி முடிவு செய்யப்பட்டு ள்ளது.