சென்னை,டிச.5- மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதை யடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
மேலும் வெள்ளம் அதிகம் தேங்கி யுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களை பாது காப்பாக மீட்டு நிவாரண முகாம் களுக்கு அழைத்து சென்று வருகின்ற னர்.
சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்ட டுள்ளது. இதில் 2477 பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள னர். மேலும் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்குவதற்காக 20 சமை யல் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், மழைநீர் அதிகம் தேங்கியுள்ள மடிப்பாக்கம், பெரியார் நகர், ராம் நகர், பள்ளிக்கரனை போன்ற பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மீண்டும் விமான சேவை
மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கி யது. பல விமானங்கள் ரத்து செய்யப் பட்ட நிலையில், நீங்கள் முன்பதிவு செய்துள்ள விமானங்கள் இயங்கு வது குறித்து அந்தந்த நிறுவனங்களி டம் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப் பட்டது.
மோசமான வானிலை தொடர்வ தால் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. விமான நிலைய ஓடுபாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு, மழை நீரை வெளியேற்றினர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப் பட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 88 விமானங்கள் என 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு அருகில் உள்ள பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.