tamilnadu

img

புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் ஒரே நாளில் 3,940 பேருக்கு தொற்று....  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து 940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 82 ஆயிரத்து 275 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 54 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1079 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1443 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 53 ஆயிரத்து 672 உயர்ந்துள்ளது.       

;