சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், “தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் தென் பட்டுள்ளதால் மருத்துவர்கள் அறிவுரைபடி வீட்டில் தனிமையில் உள்ளேன்” என கூறியுள்ளார்.மேலும் சமீபத்தில் அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெற்று விதிகளை பின்பற்றி நடக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.