tamilnadu

img

கொரோனா 2-ஆம் கட்டத்திலேய உள்ளது... தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆறுதல்

சென்னை
கொரோனா தொற்று பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,"தில்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் 303 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.

வெள்ளியன்று 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 100 பேர் தில்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள். ஒருவர் அமெரிக்காவிற்கு சென்று திரும்பியவர். மற்றொருவரின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இவர்களோடு தொடர்பிலிருந்த 379 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் கொரோனா பரவல் நிலையில் இரண்டாம் கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை. கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென்றார்.
 

;