சென்னை:
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னைபோரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.