தமிழகத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று 20,971 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.அதில், 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு 34 லட்சத்து 53 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. கொரோனா தொற்றுக்கு இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் உயிரிழந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.