tamilnadu

img

தமிழகத்தில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு....

சென்னை:
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 பேர். சென்னையில் மட்டும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து  96 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து வெள்ளியன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61,593.  வெள்ளியன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 95,561. வெள்ளியன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 8,449.  டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,920 பேர். மொத்தம்டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 96 ஆயிரத்து 759 பேர். வெள்ளியன்று வைரஸ் நோய்த் தொற்றினால் 33 பேர் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவர், 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 032 பேராக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,364 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சனையாக சுவாசப் பிரச்சனை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. வெள்ளியன்று உயிரிழந்தவர்களில் 29 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்.

;