tamilnadu

img

சென்னை மயிலாப்பூர் அருகே ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா...

சென்னை 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதில் மக்கள் நெருக்கம் கொண்ட சென்னை பகுதி அதிக சேதாரத்தைச் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 673 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த தெருவிலிருந்த குழந்தைகள், பெரியவர்கள் என 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து 11 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

;