“யானைப் பசிக்கு சோளப்பொறி போல புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை ஒன்றிய பாஜக அரசு வழங்கியுள்ளது. 2015-இல் இருந்து ரூ. 1.5 லட்சம் கோடி கேட்டுள்ளோம், ஆனால் ரூ. 7000 கோடி தான் கொடுத்துள்ளனர். வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் வாரி வழங்குகிறார்கள். ஒன்றிய பாஜக பாராமுகமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டை ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.