சென்னை:
உயிரிழப்புகள்,விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்வதால் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாதுகாப்புக்குழு அமைக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கண்காணிக்க தவறியதின் விளைவாக தொடர்ந்துவிபத்துக்கள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதுமான சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஆறு மாதத்திற்கு முன் பராமரிப்பின் போதுபாய்லர் வெடித்துச் சிதறியதில்16க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்பலியாகினர். இதற்கு முன்பும் இதேபோன்ற விபத்துக்கள் நடந்துள்ளன.இது போன்ற தொடர் விபத்துக் களை தவிர்க்க முறையான, பராமரிப்பு பணிகளில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு என்.எல்.சி.நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரைசுரங்கம் மற்றும் அனல்மின்நிலையங்களில் பணி பாதுகாப்பில் போதுமான கவனம் செலுத்தாமல் நிர்வாகம் அலட்சியம் செய்து வருகிறது.இதன் விளைவாக கடந்த இரு
தினங்களுக்கு முன்பு 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 6-வது யூனிட்டில் ஏற்பட்ட விபத்தில் சக்திவேல் என்ற ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார்.பாய்லருக்கு கரியை கொண்டுசெல்லும் கன்வேயர் பெல்ட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டி
ருந்த சக்திவேல் எதிர்பாராத வகையில் அவருடைய கை கன்வேயர் பெல்டில் சிக்கி துண்டாகி உயிரிழந்துள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!
ஓடிக்கொண்டிருக்கும் கன்வேயரில் சக்திவேலை வேலை செய்யுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்ததின் விளைவே இந்த உயிரிழப்புக்கு காரணமாகும். இதுபோன்ற ஆபத்தான பணியிடங்களில் ஒரு தொழிலாளியை மட்டும்பணிக்கு அமர்த்துவதை தவிர்த்திருந்தால் சக்திவேல் உயிரை காப் பாற்றியிருக்க முடியும். எனவே ஆபத்தான பணியை நிர்ப்பந்தம் செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விபத்தில் உயிரிழந்த சக்திவேல்குடும்பத்தினருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதைவிட கூடுதல் இழப்பீடு வழங்கி, ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க என்.எல்.சி. நிறுவனத்தை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.மேலும் இது போன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படாதவண்ணம் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.