சென்னை,டிச.3- தொடர் கனமழை மற்றும் பெஞ்சால் புய லால் சேதமான பயிர்கள்,பலியான கால்நடை களுக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக பெய்த தொடர் கனமழை மற்றும் பெஞ்சால் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து போயுள்ளன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவு 51 செ.மீ பெரு மழை பெய்து பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு சாகுபடி நிலங்களில், வீடு களில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது.
வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியவே பல நாட்கள் ஆகும். இந்நிலையில் தமிழக அரசு செவ்வாயன்று வெள்ள நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பும், சேதாரமும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை யாக ரூ.10 லட்சமாக உயர்த்தியும், மழை யினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என்று குறைவான தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயி ருக்கான இழப்பீட்டை மாநில அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம், மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள், ஆடு மற்றும் கோழிகள் இறந்து போனவற்றிற்கு மாநில அரசு இழப்பீட்டை மேலும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடுக!
வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ. 5000 வழங்கிட வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. டெல்டா மாவட்டங்கள் உட்பட புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் மாநில அரசு உடனே இழப்பீடு வழங்கிட வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.