சென்னை, மார்ச் 13- குடியுரிமையை மத அடையா ளத்தோடு இணைத்து மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரி மைத் திருத்தச் சட்டத்திற்கு (Citizen ship Amendment Act - CAA) மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் படி, தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) உருவாக்கம் மற் றும் பராமரிப்பிலும், மோடி அரசு மிகத் தந்திரமாக மாநிலங்களின் அதிகாரத்தையும் பறித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அரசியலமைப்புச் சட்ட விழுமியத்திற்கு முரணானது
குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கான விதிகளை ஒன்றிய அரசு அண்மையில் அறிவிக்கை செய்தி ருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டமானது, ‘மதச்சார்பின்மை’ என்கிற அரசமைப்புச் சட்ட விழு மியத்துக்கு முரணாக, குடியுரிமை யை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது.
ஆனால், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியர்களின் குடியுரிமை யை இச்சட்டம் பாகுபடுத்துகிறது. நாடாளுமன்றம் பின்பற்ற வேண் டிய அரசமைப்பு சட்டத்தை, நாடா ளுமன்றத்தை வைத்தே மீறுவது பாஜகவுக்குக் கைவந்த கலையாக உள்ளது.
எடுபடாத பம்மாத்துகளால் கடைசிக் கட்ட ஆயுதம்
2019-ஆம் ஆண்டு நிறைவேற் றப்பட்ட இந்தச் சட்டத்தை நாடாளு மன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந் துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும். மோடி அரசின் அனைத்து பம்மாத்து முயற்சி களும் எடுபடாமல் தவிடு பொடி யாகியுள்ள நிலையில், தற்போது கடைசி ஆயுதமாக இச்சட்டத்திற் கான விதிமுறைகளை அறிவித்தி ருப்பது வன்மையான கண்டனத் திற்குரியது.
2019-இல் சட்டம் வந்த போது இந்தியா முழுவதும் ஷாஹின்பாக் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்கள் வெடித்தன. சிபிஐ(எம்) மற்றும் இதர அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. எதிர்ப்பின் காரணமாகக் கிடப்பில் போட்டு வைத்த சட்டத்தை 2024 தேர்தல் நெருங்கும் போது, பாஜக மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.
எந்தப் பகுதியினரின் குடியுரிமைக்கும் ஆபத்து
தேர்தல் நேரத்தில் மத அடிப் படையில் மக்களைப் பிளவுபடுத் தும் நோக்கமே இதில் மேலோங்கி நிற்கிறது. மேலும் தேசிய குடிமக் கள் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்ற சூழல், இந்திய குடி மக்களாக ஏற்கெனவே உள்ளவர் களில் எந்தப் பகுதியினரின் குடியுரி மைக்கும் எந்நேரம் வேண்டுமானா லும் ஆபத்து வரலாம் என்ற அச் சத்தை ஏற்படுத்துகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே, 9 மாநி லங்கள் தேசிய குடிமக்கள் பதி வேட்டை நாங்கள் பராமரிக்க மாட் டோம் எனக் குரல் கொடுத்தன. தற்போது விதிமுறைகள் அறிவிக் கப்பட்ட பின்னணியில், கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் அதனை அமல்படுத்து வதற்கு உறுதியான மறுப்பைத் தெரிவித்துள்ளன. ஒன்றிய அரசு தந்திரமாக தேசிய குடிமக்கள் பதி வேடு பதிவு மற்றும் பராமரிப்பு பணி யில் மாநில அரசாங்கத்துக்கு இடம ளிக்காத விதத்தில் விதிமுறை களைக் கொண்டு வந்துள்ளது.
ஆடு நனைவதாக அழும் ஓநாய்
இஸ்லாம் என்கிற அமைதியான மதத்துக்கு, துன்புறுத்தும் மதம் என உலக அளவில் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகவே இச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கி றோம் என ஒன்றிய பாஜக அரசு உள்துறை அமைச்சகம் கூறி இருப்பது, ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்’ தான் தெரிகிறது.
‘இது ஒன்றிய அரசின் வர லாற்றுப் பிழை’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழ னிச்சாமி தெரிவித்திருப்பது நகைப் பிற்குரியது. குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதனை ஆத ரித்தன. மாநிலங்களவையில் அதி முக 11, பாமக 1 வாக்குகள் எதிர்த்து விழுந்திருந்தால் சட்டத்தை நிறை வேற்றி இருக்க முடியாது. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிப்போம்
தமிழ்நாட்டில் இச்சட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது.
இந்த கொடூரமான குடியுரி மைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி கள் ஒன்றிணைந்து கண்டனக் குர லெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ் ணன் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.