“தமிழகத்தில் பெரிய அளவிற்கு செல்வாக்கு இருப்பது போல வாக்கு வங்கியே இல்லாத பாஜகவிடம் இருந்து அதிகமான சத்தங்கள் வருகிறது. உண்மையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து மக்களவைத் தேர்தலை சந்தித்தால்தான், பாஜக-வினர் போடும் சத்தத்திற்கும், பெறுகின்ற வாக்கிற்கும் இருக்கும் வித்தியாசம் தெரியவரும்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.