“சமீப காலமாகவே இந்தியாவின் (வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் போன்ற) ஜனநாயக அமைப்புகள் எதுவுமே சுதந்திரமாக செயல்படவில்லை. பாஜகவில் இணைபவர்கள் சாதாரணமாக இணையவில்லை. பல உருட்டல்கள், மிரட்டல்களால் இணைகின்றனர். தேர்தல் பரப்புரை செய்ய விடாமல் காங்கிரஸ் கணக்கை முடக்கி வைத்துள்ளனர். இது எப்படி ஜனநாயகத் தேர்தலாக இருக்க முடியும்?” என்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.