tamilnadu

மாற்றுத்திறனாளி ஆணையரக நீதிமன்றத்திற்கு பாராட்டு...

சென்னை:
திருவண்ணாமலை மனவளர்ச்சி பாதித்த மாற்றுத்திறன் பெண் வல்லுறவு செய்து கர்ப்பிணி ஆக்கப்பட்ட குற்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள் ளது.

2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதி நடைமுறைகள் இந்த வழக்கில் கடைப்பிடிக்கப் பட்டனவா? என்பதற்கான நிலை அறிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், திருவண்ணாமலை கோட்டாட்சியர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்டோர் ஜுன்-4 ஆம் தேதிக் குள் எழுத்துபூர்வமாக அளிக்க மாற்றுத் திறனாளிகள் நல நீதிமன்றம் சார்பாக ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு பிறப்பித் துள்ளார்.மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்றுள்ளது.

;