ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பாளராக கடந்த 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். முரளி தாஸுக்கு ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ். செல்வம் தலைமையில் வெள்ளியன்று (ஜூன். 28) சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் டி. சந்திரன், ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர்கள், விவசாய சங்கம், வாலிபர் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் தலைவர்கள் உடனிருந்தனர்.