tamilnadu

img

இலவச வீடுமனை பட்டா வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மாநாடு கோரிக்கை

இலவச வீடுமனை பட்டா வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மாநாடு கோரிக்கை'

திருப்போரூர், ஜூன் 24- திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய 3 வது மாநாடு செம்பாக்கத்தில் ஒன்றிய தலைவர் கே.லிங்கன் தலைமை நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் கொடி ஏற்றிவைத்தார்.  மாநாட்டை துவக்கி வைத்து மாநில குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணன் பேசினார். ஒன்றிய செயலாளர்  எப்.அருள் ராணி வேலை அறிக்கையையும்  பொருளாளர் வி.பூபதி வரவு செலவு அறிக்கையை வாசித்தனர்.  மாவட்டச் தலைவர் எம்.வெள்ளி கண்ணன், விவசாயிகள் சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் ஜி. மாரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர் மாவட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயணி நிறைவு செய்து பேசினார். ஒன்றிய துணைச் செய லாளர் வி.நாகராஜன் நன்றி கூறினார். தீர்மானம் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், ரயில்வே பயண அட்டை, பேருந்து பயண அட்டை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்,மயிலை பஞ்சாயத்துக்குட்பட்ட இடர் குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் பழுதடைத்து உள்ள சாலைகளை செப்பனிட்டு இயங்கா மல் நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள்இம் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது நிர்வாகிகள் தேர்வு தலைவராக கே.லிங்கன்,  செயலாளராக எப்.அருள் ராணி,  பொருளாளராக வி.பூபதி உள்ளிட்ட29 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.