tamilnadu

திருமண்டகுடி ஆரூரான் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது வழக்கு

சென்னை,ஜன.4- திருமண்டகுடி ஆரூரான் போராட்டத்தில் பங்கேற்ற 69 விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்  கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்தி ரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருமண்டகுடி ஆரூரான் கரும்பு விவ சாயிகள் பிரச்சனைகளுக்கு அமைச்சர் அளித்த  வாக்குறுதிப்படி முழுமையாக தீர்வுகாணக் கோரி, சட்ட விரோதமாக விவசாயிகளிடம் பிர மாணப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய கால்ஸ் நிர்வாகத்தை கண்டித்து திருமண்ட குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 29-12-2023 அன்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்  நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செய லாளர் சாமி.நடராஜன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் காதர் உசேன், ஆரூரான் ஆலை  செயலாளர் நாக.முருகேசன், ஆலை சங்க  நிர்வாகிகள் சரபோஜி, ராஜகோபால், செந்தில்  உட்பட 69 விவசாயிகள் மீது தஞ்சாவூர் மாவட்டம் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்துள்ளது.

காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் கண்டிக்கிறோம். 400 நாட்களாக நடக்கும் போராட்டம் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் 150 கோடி ரூபாய் கடனை வாங்கி ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்டு, விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்தது. விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர்க்கடன் பல கோடி ரூபாயை விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்பு பணத்தில் பிடித்தம் செய்து கொண்டு ஆரூரான் ஆலை பிடித்தம் செய்த பணத்தை பயிர்க்கடனுக்காக வங்கி களுக்கு செலுத்தாமல் மோசடி செய்தது,

விவசாயிகளுக்கு கரும்புபண பாக்கியையும் தராமல் 2018 இல் சர்க்கரை ஆலைகளை மூடி விட்டனர்.  இதற்கு நீதி கேட்டுத்தான் தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகளை திரட்டி தொடர் காத்திருக்கும் போராட்டத்தை 30-11-2022 காலை திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் இரவு பகலாக 400 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் பிரச்ச னைகளுக்கு முழுமையான தீர்வை காண மாநில அரசை வலியுறுத்தி 29-12-2023 அன்று  திருமண்டகுடி ஆரூரான் ஆலை வாயிலில்  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

400 நாட்களாக  நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சி யாகத்தான் டிசம்பர் 29 ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி விட்டார்கள் என்று கூறி சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் உட்பட போராடிய விவசாயிகள் மீது காவல் துறை வழக்கு போட்டிருப்பதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.

வழக்குகள் போட்டு விவசாயிகளை அச்சு றுத்திட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முயற்சிப்பதை நிறுத்திக் கொண்டு 17-11-2023 பேச்சுவார்த்தையின் முடிவில் அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மாநில அரசு, டெல்டா மாவட்ட கரும்பு விவ சாயிகளை பாதுகாத்திட வேண்டும். விவசாயி கள் பெயரில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.