tamilnadu

செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,ஜன.25- தனியார் தொலைக்காட்சி செய்தி யாளர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய காவல்  ஆய்வாளரை காத்திருப்பு பட்டியலுக்கு  மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார் இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு :

“திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி நிறுவ செய்தியாளர், நேச பிரபு அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடப்பதற்கு முன்பு செய்தி யாளர் நேச பிரபு காவல் நிலையத்தில்  பாதுகாப்பு கோரிய அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடி யாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரி யத்தில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கிட வும் உத்தரவிட்டுள்ளார்.

” இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பல்லடம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக் காட்சியான நியூஸ் 7 செய்தியாளர் பணிபுரிந்து வருகிறார். அவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னையில் உள்ள நியூஸ் 7 தொலைக்காட்சி அலுவலகம், கோவை, திருப்பூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை பத்திரிகையாளர் மன்றம், கோவை, திருப்பூர் பத்திரிகையாளர் மன்றங்கள், சென்னை பத்திரிகையாளர் சங்கம். தமிழ்நாடு ஜேர்னலிஸ்ட் யூனியன் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.