திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம், திருத்தங்கூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினரும், சிஐடியு சங்க உறுப்பினருமான தோழர் எஸ். குப்புசாமி உருவப் படத்திறப்பு நிகழ்ச்சி திருத்தங்கூரில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றி யக் குழு உறுப்பினர் ஏ. முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தோழர் குப்பு சாமி உருவப் படத்தினைத் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதி பாசு, ஒன்றியச் செயலாளர் வி.டி.கதிரேசன், அம்மனூர் ஊராட்சி தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.