tamilnadu

img

தோழர் அசோக் உருவப்படம் திறப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் திங்களன்று ( ஜூலை 1) தொடங்கியது.  சாதி ஆதிக்க சக்திகளால்  படுகொலை செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் தோழர்.அசோக் உருவப்படத்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் அவாய்முகர்ஜி திறந்து வைத்தார்.  அகில இந்தியத் தலைவர் முகமதுரியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இந்தியத் தலைவர்கள் மற்றும் கேரள மாநிலச் செயலாளர் ஏ.ஏ.ரஹீம், மகாராஷ்டிரா மாநிலச்செயலாளர் பிரீத்திசேகர், மேற்குவங்க மாநிலத்தலைவர் மீனாட்சி முகர்ஜி, செயலாளர் சந்தீப் மித்ரா, தமிழ்நாடு மாநிலத்தலைவர் ரெஜீஸ்குமார், மாநிலச்செயலாளர் பாலா, மாநிலப்பொருளாளர் தீபா, மத்தியக்குழு உறுப்பினர்கள்   பாலசந்திரபோஸ், மணிகண்டன், வடசென்னை மாவட்டத் தலைவர் கார்த்தீஷ்குமார், செயலாளர் சரவணத்தமிழன், பொருளாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;