சென்னை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுவர் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி உருவாகக் காரணமான தியாகிகள் 5 பேரின் உருவப் படங்களுக்கு வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக உறுதியாக உள்ளதாகவும், இதில் கட்சிக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும்
தெரிவித்தார்.
முஸ்லிம் லீக்
இது போல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் எம்.எல்.ஏ ‘2021 சட்டமன்ற தேர்தலில் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பொருந்தாது என கூறி உள்ளார்.