சென்னை, ஜூலை 6- தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் சனிக்கிழமையன்று (ஜூலை 6) மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் அளவில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தி ருந்தது. அதன்படி கூட்டம் நடத்த வலி யுறுத்தி ஜூன் 26 அன்று தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சங்க நிர்வாகிகளை அழைத்து கோட்டாட்சியர் ராஜகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதாக உறுதியளித்தார். அதன்படி சனிக்கிழமையன்று (ஜூலை 6) அன்று தாம்பரம் கோட்டாட்சியர் ராஜகுமார் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடை பெற்றது. இதில் பல்லாவரம், தாம்பரம் வட்டாட்சியர்கள், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான மண்டல அலுவலர் (டிடிஆர்ஓ) உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட னர். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், பொருளானர் கே.பி.பாபு, துணைச் செயலாளர் சம்பத்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 61 மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, வங்கி கடன், வீல்சேர், தையல் மிஷன் போன்றவை கேட்டு மனு அளித்தனர். 2 பேர் 100 நாள் வேலை கேட்டு மனு அளித்த னர். மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரி கள் 4 பேருக்கு வீல்சேரும், 4 பேருக்கு பேட்டரி வில் சேரும் வழங்கினர். அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் சனிக்கிழமையன்று நடைபெறும்.