புதுச்சேரி, ஜூன் 26- புதுச்சேரியில் நீர் நிலை களை பாதுகாத்தல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்து தல் சம்பந்தமான ஆலோ சனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற் றது. முதல்வர் நாராயண சாமி தலைமைச் தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், தலை மைச் செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர் அருண் உட்பட செயலர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின்னர் பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது, “புதுச்சேரி மாநில மக்கள் அனை வருக்கும் தரமான குடிநீர் தர வேண்டும் என்று இக்கூட் டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. எந்தப் பகுதி யில் நீர் தட்டுப்பாடு உள்ளதோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தட்டுபாட்டை போக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். பருவ மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை சேமிப் பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது. அதனடிப்படை யில் ஏரி, குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்கெ னவே தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக இந்த பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அந்தப் பணிகளை உடனடியாக முடிக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அமைச் சர் கூறினார். நீர்வரத்து வாய்க்கால் களை தூர்வாரவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்பணி களுக்காக ஆட்சியர் தலை மையில், பொது மக்களும் இடம் பெறும் வகையிலான உயர் மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும். இக்குழு பணிகளை கண்காணித்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.