tamilnadu

img

அரசுப் பள்ளியில் நேர்மை கடை துவக்கம்

திருவண்ணாமலை,பிப்.21- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 102 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளித் தலைமையாசிரியர் ஏற்பாட்டின் பேரில், இந்த பள்ளியில் நேர்மை கடை தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், நோட்டு, ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பொருட் களுக்கான  விலைப் பட்டியல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும். பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலைக்கேற்ப பணத்தை டப்பாவில் வைத்துவிட்டு, அதற்கான பொருளை மாணவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தத் திட்டம் கடந்த பிப் 8 ஆம் தேதி துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதாக பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு சிறு வயது முதலே நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கடை துவங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.