tamilnadu

img

தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு தினம்: மக்கள் ஒற்றுமை பேரணி

சின்னாளப்பட்டி,ஜன.13-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான தோழர் எஸ்.ஏ. தங்க ராஜன் நினைவுதினமான ஜனவரி 13 சனிக்கிழமையன்று மக்கள் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.

சின்னாளப்பட்டிசிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து  ராஜன் உள்விளையாட்டு அரங்கு வரை  250-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் கண் தானம், ரத்ததானம், மனிதநேயம், மக்கள் ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி மாபெரும் பிரச்சாரப்  பேரணியை நடத்தினர்.

தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் மகனும் ரோல்பால் ஸ்கேட்டிங்  சங்கத்தின் மாவட்டத் தலைவருமான எஸ்.ஏ.டி.வாஞ்சிநாதன் பேரணியை துவக்கி வைத்தார்.  தோழர் எஸ்.ஏ. தங்கராஜின் மனைவி சகுந்தலா அம்மாள், ரோல்பால் ஸ்கேட்டிங் சங்க மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், மாஸ்டர் பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.